Such (is the Pilgrimage): whoever honours the sacred rites of God, for him it is good in the Sight of his Lord. Lawful to you (for food in Pilgrimage) are cattle, except those mentioned to you (as exceptions): but shun the abomination of idols, and shun the word that is false,- AL-Qur'aan - 21:30

Friday, May 21, 2010

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆண் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?






இப்பொழுதுள்ள குரானையும் அருங்காட்சியத்தில் உள்ள அந்த பழைய குரானையும் ஒப்பிட்டால் எந்த வேறுபாடும் காண முடியாது.
முதலில் இந்த கேள்வி உருவானதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.குர்ஆணை படித்து பார்க்கும் எவருக்கும் இதில் உள்ள அறிவியல் உண்மையாக இருக்கட்டும்,குற்றவியல் சட்டமாக இருக்கட்டும்,பெண்ணுரிமை சம்பத்தப்பட்ட விசயமாக இருக்கட்டும்,ஒழுக்ககேடுகளுக்கு தடை போடும் விசயங்களாகட்டும் படித்து பிரமிச்சிப்போய் முதலில் தோன்றும் சந்தேகம் இந்த குர்ஆண் நூறு சதவிகிதம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாம் கற்று தேர்ந்த ஒரு மனிதனால் எழுதப்பட்டதுபோல் இருக்கிறதே என்பதுதான்.

எனவேதான் இந்த குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த யாரோ சிலரால் எழுதப்பட்டு நபியவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது.

இந்த சந்தேகத்திற்கு வரலாற்று விளக்கங்கள்தான் தேவை முகம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் கற்காலம் அல்ல வரலாறுகளை எழுதி பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலம்தான் அது.அவர்களது பிரச்சாரம்,சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் நபியவர்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக்கனக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆண் அருளப்பட்டதாக கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்றும் கூட ரஷ்யாவின் தாஸ்கண்டு நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் கூட இந்த வரலாறுகளுக்கு சாட்சியம் கூறிக்கொண்டு இருக்கின்றன.
எனவே திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பத்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. காரணம் 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வை தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். (2:23)
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கர்க்கலுமே அதன் ஏறி பொருட்கள். (ஏக இறைவனை) மருப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)
 
நன்றி  : உண்மை குரல்
 
 

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails